20160716

பில்லி வஞ்சனை தீர்க்கும் பிரம்ம முனி சூரணம்.



சீரகம் 35 கிராம்

அதிமதுரம் 35 கிராம்

சிறுநாகப்பூ 35 கிராம்

கருஞ்சீரகம் 35 கிராம்

லவங்கப்பூ 35 கிராம்

சதகுப்பை 35 கிராம்

கொத்தமல்லி விதை 210 கிராம்

சீனிக் கற்கண்டு 420 சிராம்.




எல்லாச் சரக்குகளையும்

லேசாக வறுத்து இடித்து

சூரணமாக்கி அத்துடன்

கற்கண்டுத் தூளையும் சேர்த்து

பத்திரப்படுத்தவும்.




காலை, மாலை, இருவேளை

சாப்பிடும் முன்பு ஐந்து விரலால் அள்ளும் அளவு

எடுத்து சுடுதண்ணீரில்

சாப்பிட்டு வரவும்.




பயன்கள்:- உடம்பு திடமா

கும். குலையெரிவு நெஞ்சு

எரிச்சல் குணமாகி நெஞ்சு

திடப்படும். சிரசு சமபந்தப்

பட்ட தலைவலி காதுவலி

கண்நோய் அனைத்தும்

மற்றும் ஞாபகசக்தி குறைவு

குணமாகி அறிவாற்றல்

பெருகும்.பித்தம் சம்பந்தப்

பட்ட அனைத்தும் தீரும்.

கண் பிரகாசமாகும்.நல்ல

தூக்கம் உண்டாகும்.தீராத

புழுக் கிருமிகள் அழியும்.

இடுப்பு வலி கல்லடைப்பு

தீரும்.வாய் கோணல் வாய்

குளறுதல் தீரும்.காதுவலி

முதல் இடையில் ஏற்பட்ட

காது கேளாமை நோய் தீரும்

சளி இருமலோடு சேத்துமம்

அனைத்தும் தீரும். தொண்டை புண் கண்டமாலை உடம்பு

முழுவதும் நீர் சம்பந்தப்பட்ட

நோய் தீரும்.




இந்த மருந்து சாப்பிட்டவர்

களுக்கு மேற்கண்ட நோய்கள்

குணமாவதோடு ஏவல்

பில்லி வஞ்சனை போன்ற

தீயசக்திகளும் விலகும்.




இது ஒரு அற்புதமான மருந்து. அனுபவத்தில்

பலபேருக்கு கொடுத்து

பயனடைந்த மருந்து.

நன்றி.

20160401

சில செடிகளில் இருக்கும் சில சத்துக்கள்...

எல்லா தாவர வகையிலும் ஒரு கனிம பொருள் - இரசாயன பொருள் உள்ளடங்கி உள்ளது. இது கர்ம - பாவ புண்ணிய கடத்தியாக செயல்படுகிறது.
1. அத்தி - இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11. கத்திரிக்காய் – மெக்னீசியம்
12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13. கருவேப்பிலை – இரும்புச்சத்து
14. கீழாநெல்லி – காரீயச்சத்து
15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து
16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
19. தும்பை – செம்புச்சத்து
20. துத்தி – கால்சியம்
21. தூதுவளை – ஈயச்சத்து
22. நன்னாரி – இரும்புச்சத்து
23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து
24. பற்பாடகம் – கந்தகச்சத்து
25. பிரம்மத்தண்டு – தங்கச்சத்து
26. பிரண்டை – உப்புச்சத்து
27. புதினா – இரும்புச்சத்து
28. பெரும்தும்பை – தங்கச்சத்து
29. பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30. மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து
31. முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32. முருங்கை – இரும்புச்சத்து
33. வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
34. வெண்டைக்காய் – அயோடின்.
35. நுணா – தாமிரச்சத்து

துக்கடா வைத்தியம் 1

1) பொன்மேனி தரும் குப்பைமேனி

குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.


2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை

2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.


69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.



நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
-- ------------------------------------------------------------------------------
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
--------------------------------------------------------------------------------
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
--------------------------------------------------------------------------------
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
--------------------------------------------------------------------------------
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
--------------------------------------------------------------------------------
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
--------------------------------------------------------------------------------
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
--------------------------------------------------------------------------------
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
--------------------------------------------------------------------------------
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
--------------------------
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாக

20160326

கர்ப்ப காலத்தில் பாட்டி வைத்தியம்!



* கர்ப்ப காலத்தில் சிலருக்கு கை, கால் வீக்கம் வருவது இயல்புதான். இப்படிபட்டவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து, சட்டியில் வறுத்து-வெடிக்கும்போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால், கால் வீக்கம் குறையும்.

* மூன்றாவது மாதம் தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தய கஞ்சி சாப்பிடுவது, சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

* 5 வது மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீரில், சிறிதளவு வெண்ணெய் கலந்து மதியம் நேரத்தில் சாப்பிட தரலாம். கர்ப்பகாலம் முதல் பிரசவகாலம் வரையிலும் சின்னவெங்காயம், சீரகம் சேர்த்த முருங்கை கீரை சூப் வைத்து சாப்பிடலாம். இதனால் பிரசவம் சுலபமாகும்.

* பிரசவநாள் நெருங்கும் நேரத்தில் சிலருக்கு அடிக்கடி வயிறுவலி வரும். அப்போது வெற்றிலை, ஓமம், பூண்டு சேர்த்த கசாயம் வைத்து சாப்பிடலாம். சாதாரண வலி என்றால் நின்றுவிடும். அதே பிரசவ வலி என்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு என்று அர்த்தம்.

குழந்தைக்கு ஏன் நல்லது?






காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனில் ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும்.
தினமும் இரவில் விள்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!
நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.
சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும்.
குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும்.
குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.
பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.
குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.
குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.
தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்.
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து குளிப்பாட்டாத நாட்களில் வெந்நீரில் யுடிகோலோன் போட்டு குழந்தையைத் துடைத்து பவுடர் போட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம்

குழந்தைகளை பத்து மாதம் சுமந்து பெற்றுக்கொள்வது பெரிய விஷய அல்ல. அந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்குதான் மிகவும் கஷட்ப்பட வேண்டியதாகிவிடும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு வயசு ஆகும்வரை சொல்லவே வேண்டாம்... எதுக்கு அழகிறது, பசிக்கிறதா அல்லது ஏதேனும் கடித்து விட்டதானு தெரியாம தாய்மார்கள் முழிவேண்டியதுதான்..

ஐந்து மாதக் குழந்தை வயிறு வலியால் அழுதால் கடுக்காயை சந்தனம் மாதிரி உரசி குழந்தையோட வயித்துல பூசி விடவேண்டும்.. ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடலாம்.. இரண்டு நிமிடங்களில் குழந்தையின் வயிற்று வலி நீங்கி குழந்தை சிரிக்கும். சில குழந்தைகளுக்கு வாயில் மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, உரசிய விழுதை குழந்தையோட நாக்குல தடவினால் பிரச்னை சரியாகிடும்.

சின்னக் குழந்தைகள் வாந்தி பண்ணினால், வசம்பை சுட்டு பொடி செய்து ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினால் உடனே குணம் கிடைக்கும். கிராமங்களில் வசம்புக்கு ‘பிள்ளை வளர்ப்பான்’ என்றொரு பெயரே உண்டு. சூடு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போகுதா கவலைப்பட வேண்டாம். ஜாதிக்காயை கல்லில் உரைச்சு தாய்ப்பால்ல கலந்து குடுத்து பாருங்க, உடனே குணம் கிடைக்கும். மூன்று வேளையும் இப்படிக் கொடுத்து வந்தால் மழுவதும் குணமாகிடும். ஆனால், ஜாக்கிரதை! ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது. ஜாஸ்தியாகிடுச்சினா குழந்தைக்கு மயக்கம் வரவும் வாய்ப்பு இருக்கு.

கைக்குழந்தைகளுக்கு மாந்தம், உப்புசம் வராமல் தடுக்கும் உரை மருந்து

ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒண்ணு எடுத்து வேகவைத்து, அதை எடுத்து வெயிலில் சுக்கா காய வைக்கவேண்டும். குழந்தையை தலைக்கு குளிப்பாட்டுகிறபோது இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்ல ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, ரெண்டு டேபிள்ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து புகட்டணும்.

ஆறு மாசக் குழந்தைகளுக்கு பத்து நாளுக்கு ஒருமுறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீரில் கலந்து, ஒரு பாலாடை அளவு குடிக்க வைத்தால் குழந்தையின் வயிற்றில் வாயு சேராமல் இருக்கும். பிறந்த குழந்தைகளுக்கு தலையில நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது! தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தையின் தலையிலும், உடம்பிலும் தேய்க்கத் தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வைத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விட்டு அது கொதிச்சு அடங்கினதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க.

குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். குளிக்க வைக்கும் போது எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்த்து குளிப்பாட்டணும். இப்படி செய்து வந்தால் குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராது, மேனி பட்டு போல இருக்கும். மார்கழி பனியில் கைக்குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும். அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில், 2 பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா... சளி அனைத்தும் மலத்தில் வெளியாகிவிடும்.

குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி ஜலதோஷமும் சளித் தொந்தரவும் ஏற்படுகிறது. வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா?

அரை இன்ச் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் கப் ஆக வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரை டீஸ்பூன் வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம். வாரம் 2 அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளி, ஜலதோஷம், தலைவலி என எந்தப் பிரச்னையும் நெருங்காது.

சிலர் கசப்பான பொருட்களை நாக்கில் படாமல் அப்படியே முழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச் சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும். அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். அறுசுவை களையும் குறைவில்லாமல் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இயற்கை வைத்தியம் பெரிதும் பயன்படுகிறது. குழந்தைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எளிதில் இருமல் தாக்கும். இருமல், சளி வந்ததும் அழையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனை. இவை குழந்தைகளின் உடல்நலத்தை அடிக்கடி பாதிக்கும். இந்த வகையும் பொதுவான நோய்தொற்றுகளில் ஒன்று தான். குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபட ஓமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க செய்ய வேண்டும்.

இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்னை வராமல் தடுக்கலாம். டயாபர் அதிகம் உபயோகிப்பதனால் குழந்தைகளுக்கு அரிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. இந்த அலர்ஜியை தடுக்க குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு வைத்துள்ள தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று சொட்டு வெள்ளை வினிகர் கலந்து குளிக்க வைக்கலாம்.

கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே அவர்கள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் குழந்தைகளுக்கு பசி எண்ணமே இருக்காது.

இருமல் ஏன்?

டயாபர் ஒவ்வாமை குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபட ஓமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க செய்ய வேண்டும். இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்னை வராமல் தடுக்கலாம். மேலும் இருமல் பிரச்னைக்கு பெருந்துத்தி பூக்களைக்கொண்டு குளிர்பானம் தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குளிர்பானத்தை வடிகட்டி ஒரு சிறிய துணியில் ஈரமாக்கி குழந்தையின் தொண்டை, மூச்சு குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் தேய்க்க இருமல் குணமாகும்.

பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் பாட்டி, தாத்தா போன்ற அனுபவசாலிகள் இருந்தால் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கவலை இல்லை. அப்படி பெரியவர்கள் இல்லாத வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகள் காரணமே இல்லாமல் திடீரென பெரும் அலறலுடன் அழும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

சாதாரணமாக ஏதேனும் பிரச்னை என்றால் தான் குழந்தை அழும். சிறிய குழந்தைகளுக்கு பசி ஏற்பட்டால் அழும். மேலும் புதுவிதமான பிடிக்காத உணவை கொடுத்தாலும் அழும். அந்நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. பசி இல்லாவிட்டாலும் உறிஞ்சுவது அக்குழந்தைக்கு ஆறுதல் அளிக்கும். சில சமயம் பெற்றோர் கண்ணில் படாத நேரங்களிலும் குழந்தைகள் அழும்.

அப்போது குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினால் அழுகையை நிறுத்தி விடும். இறுக்கும் துணிகள், மிகவும் உஷ்ணமாக்கும், மிகவும் குளிர்ச்சியான துணிகள் அணிவதால் ஏற்படும் உணர்வால் அழும். மேலும் பல் முளைத்தல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படும் போதெல்லாம் கூட அழலாம். இப்பிரச்னையை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.கால்களை உதைத்து உதைத்து உரக்க அழுதால் குழந்தைக்கு மலப்பையில் ஏற்பட்ட பிடிப்பினால் வயிற்று வலி உள்ளது என்று அர்த்தம்.

சாதாரணமாக காய்ச்சல் உள்ள குழந்தையின் அழுகை சத்தம் குறைவாக இருக்கும். அரற்றும். வலியின் காரணம் தெரிந்தால் சரி செய்து குழந்தையை தேற்ற வேண்டும். இல்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். கால்களை உதைத்து அழும்போது அடிவயிற்று வலி இருக்கிறது என்று அர்த்தம். இதற்கு நேராக மேல் நோக்கி சில நொடிகள் பிடிப்பது பிரச்னையை தீர்க்கும். சிவந்த, பிசுபிசுப்பான கண்களாக இருந்தால் கண் நோய் ஏற்பட்டதாக கருதலாம்.

இதற்கு கண்களை வெந்நீரால் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகள் எப்போதாவது மலம் கழிக்கும். கெட்டியாக, சிரமப்பட்டு போனால் அதற்கு மலச்சிக்கல் நோய் தொற்றியுள்ளது என்பதை உணர வேண்டும். இதற்கு பாலூட்டுவதும், ஆகாரமும் குறைவாக உள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும். கூடுதல் திரவ ஆகாரங்கள், பழச்சாறு கொடுக்கலாம்.

இளகிய, நீராக மலம் போனால் சீத பேதி ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். இதற்கு நிறைய திரவ பதார்த்தங்களை கொடுக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ். மற்றும் தொடர்ந்து வழக்கமான ஆகாரம் கொடுக்க வேண்டும். தொடைகள் மற்றும் பின்புறம் சிவந்திருந்தாலும் நேப்பி ரேஷ் வந்துள்ளதை அறியலாம். இதற்கு நேப்பியை அடிக்கடி மாற்ற வேண்டும். குழந்தையை சுத்தமாக, உலர்வாக வைத்திருப்பது அவசியமாகும்.

பின்புறத்திற்கு நல்ல காற்றோட்டம் தேவையாகும். தலையில் மஞ்சள் செதில்கள் உருவாகி பொடுகால் குழந்தைகள் அழலாம். இதற்கு ஒரு வாரத்திற்கு தினமும் குழந்தையின் தலைமுடிக்கு ஷாம்பூ போட்டு அல சினால் பொடுகு குணமாகும். இவைகள் மூலம் குழந்தைகள் என்ன காரணத்திற்காக அழுகிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வைத்தியம் செய்வது குழந்தைகள் அழுகையை நிறுத்த வழி செய்யும்.

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்

20160314

வெண் புள்ளி நோய்க்கு எளிய அனுபவ வீட்டு மருத்துவம்

வெண் புள்ளி என்ற வெண்குஷ்டம் என்ற விடிலிகோ நோய்க்கு மிகச் சிறந்த எளிய அனுபவ வீட்டு மருத்துவம்
கண்டங்கத்தரி காய்ந்த வற்றல் ......இரண்டு தேக்கரண்டி ( நாட்டு மருந்துக்
கடைகளில்கிடைக்கும் )
செக்கு நல்லெண்ணெய் .......நூறு மில்லி
நல்லெண்ணெயை நன்கு காய்ச்சி கொதித்துக் கொண்டிருக்கும் நல்லெண்ணெயில் கண்டங்கத்தரி வற்றலைப் போட்டு நன்கு சிவக்கும் வரை கிளறிவிட்டு தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடி கட்டி ஆற வைத்து கண்ணாடிப் பாட்டிலில் சேமித்து வைக்கவும்
தினமும் காலையில் எழுந்தவுடன் உடலில் வெள்ளையாக இருக்கும் இடங்களில் இந்த தைலத்தைத் தேய்த்து சூரிய வெளிச்சத்தில் அரை மனி நேரம் வெயில் படும்படி நின்று வர வேண்டும் தொடர்ந்து பயன்படுத்திவர வெண் புள்ளி நோய் பரிபூரணமாகக் குணமடையும்
வேறு தோல் நோய்கள் இருந்தாலும் சரியாகி தோல் மினு மினுப்படையும்
தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்

20160305

வெந்நீர் மகத்துவம் :- வெந்நீர் மகத்துவம் :

- அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!! தமிழில் ”வெந்நீர்” எனப்படுவது ஆங்கிலத்தில் ”ஹாட் வாட்டர்” என்றும், ஹிந்தியில் ”கரம் பானி” என்றும் ஜப்பானிய மொழியில் ”ஹை-யை-யோ” என்றும் அழைக்கப்படுகிறது. 
எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வெந்நீர் சுடும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும்
.யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ”அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்…” என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு.உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். 
இதோ பாருங்கள்… வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று! 

நெஞ்சு எரிச்சல் போகணுமா? ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு! 

சதை குறையணுமா? வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.';;

 காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!

 உடம்பு வலிக்கிறதா? உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

 கால் பாதங்கள் வலிக்கிறதா? எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். 

காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும். 

மூக்கு அடைப்பா? மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! 

வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும். 

வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. 


ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். 
திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும். 

ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும்.

 இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும். தரையை துடைக்கும் போது அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்! 

திடீரென்று கடுமையான தலை வலியா? தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். 
சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும். 

சுறுசுறுப்புக்கு `சுக்கு வெந்நீர்’ தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும். 
சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம். சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம்) ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம். சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும்

உதடுவெடிப்பு (ORAL ULCER)

வாய்ப்புண்.  1.கோவைக்காயில் சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும்

 2.சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலைமாலை 1தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு,உதட்டுப்புண் குணமாகும்

3.தவசுமுருங்கை இலைகளை மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும்

4.கொப்பரைத்தேங்காயை துருவல் அரை கோப்பையுடன் அரை தேக்கரண்டி கசகசா சேர்த்தரைத்து துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்

5.திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும்

6.1பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்

7.நெல்லிபட்டையை தூள் செய்து தேனில் குழைத்து வாய்ப்புண் மீது தடவ குணம் ஆகும்

 8.மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்

 9.மணத்தக்காளியிலைகளை மென்று சாறை 1நாளைக்கு 6முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்

 10.மருதாணிஇலைகளை 1மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய்கொப்புளிக்க வாய்வேக்காடு,வாய்ப்புண்,தொண்டைப்புண் ஆறும்

11.மாதுளம்பூச்சூரணம் அரைதேக்கரண்டி, 250மிலி நீரில் காய்ச்சி வாய்கொப்புளிக்க வாய்ப்புண், தொண்டைரணம், வலி தீரும்.

12.அன்னபேதிச்செந்தூரம்200மிகி,,திரிபலாச்சூரணம்1-2கிராம்,5-10மிலி தேனில் குழைத்து தினமிருவேளை சாப்பிட வாய்ப்புண் ஆறும்.

13.நன்னாரி மணப்பாகு 5-10மிலி,தினமிருவேளை கொள்ள வாய்ப்புண்கள் ஆறும்

14.வெங்காரமது 3-5துளி வாய்ப்புண்களின்மீது தடவிவர குணமாகும்

15.மாசிக்காயை இழைத்து வாய்ப்புண்களின் மீது தடவ குணமாகும்.

16.அகத்திக்கீரையை கழுநீரில் வேகவைத்துக் குடிக்க வாய்ப்புண்கள் ஆறும்

17.வசம்பைச் சுட்டு சாம்பலாக்கி,தாய்ப்பாலில் உரைத்து நாவில் தடவ, நாத்தடுமாற்றம்,வாய்நீரொழுகல் குணமாகும். நன்கு பேச்சுண்டாகும்.

18.ஒதியம்பட்டைசூரணம் 1-2கிராம்,தினம்3வேளை,மோரில் உண்டு வர வாய்ப்புண்,குடற்புண்,பேதி,குருதிக்கழிச்சல் தீரும்.

 19.பச்சைபயரை முளைகட்டி காலையில் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும்

20..ஆவாரைபட்டையை பொடித்து கசாயமிட்டு வாய்கொப்புளிக்க வாய்ப்புண், வாய்துர்நாற்றம் நீங்கும்

 21.சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம்,வாய்ப்புண் குணமாகும்

 22.கொய்யாஇலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி,வாய்ப்புண் குணமாகும்

23.தான்றி தளிரிலைச் சாற்றினை வெள்ளைத் துணியில் தடவியுலர்த்தி, நீரில் பிழிந்து,வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்

 24.அகத்திக்கீரை கொழுந்தை வாய்கொண்டமட்டும் காலையில் மென்று தின்ன 3நாளில் வாய்வேக்காடு தீரும்

 25.மருதாணி இலையை கியாழம்செய்து வாய் கொப்புளிக்க வாய் வேக்காடு நீங்கும்

 26.மணித்தக்காளியிலையை சிறுபயர் போட்டு சமைத்துச்சாப்பிட வாய்வேக்காடு நீங்கும்

27.மல்லிகை இலையை வெற்றிலைபோல் மென்று துப்பிவர வாய்ப்புண் ஆறும்

28.அம்மான்பச்சரிசி இலையை சமைத்துண்ண வறட்சி அகலும். வாய்,நாக்கு, உதடுவெடிப்பு,ரணம் தீரும்

. 29. ஆலம்பாலை காலைமாலை தடவிவர வாய்ரணம், உதடு, நாக்குவெடிப்பு, கைகால் வெடிப்பு, பல்ஆட்டம் தீரும்.

 30.ஒருபங்கு எலுமிச்சைசாறு,5பங்கு நீர் கலந்து வாய்கொப்புளிக்க வாய் வேக்காடு தீரும்.

 31.திருநீற்றுப்பச்சிலையை வெறும் வயிற்றில் வாய் கொண்டமட்டும் மென்று தின்ன வாய்வேக்காடு தீரும்.

 32.உணவுக்குமுன் எலுமிச்சம்பழசாறு பருக அஜீரணம்,வாய்வேக்காடு தீரும்

20160303

ஸுதர்சன சூர்ணம்



மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்
(ref-சாரங்கதர சம்ஹித - மத்யமகண்டம்)


யார் சொன்னார்கள் -ஆயுர்வேத சித்த மருந்துகள் வேலை செய்ய தாமதம் ஆகும் என்று ?
சாதாரண காய்ச்சலுக்கு யார் ஆயுர்வேத சித்த மருந்துகளை நாடி வருகிறார்கள் ?-விரல் விட்டு எண்ணக்கூடிய நோயாளிகளை தவிர ..
(ஆனால் என்னிடம் காய்ச்சலுக்கும் பெரியவர்களும் ,பச்சிளம் குழந்தைகளும் ஆயுர்வேத வைத்தியம் பெற என்னிடம் வருவதுண்டு )

ஆயுர்வேத மருந்தில் காய்ச்சலை ஊசி மருந்தை விட வேகமாக குறைக்கும் மருந்து வேண்டுமா நண்பர்களே ?
அது இந்த சுதர்சன சூர்ணம் தான் அது ..



தேவையான மருந்துகள்:


1. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீபலத்வக் 10 கிராம்
2. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீபலத்வக் 10 “
3. நெல்லிமுள்ளி – ஆமலகீபலத்வக் 10 “
4. மஞ்சள் – ஹரீத்ரா 10 “
5. மரமஞ்சள் – தாருஹரீத்ரா 10 “
6. கண்டங்கத்திரி – சண்டகாரீ 10 “
7. முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ 10 “
8. கிச்சலிக் கிழங்கு – ஸட்டீ 10 “
9. சுக்கு – சுந்தீ 10 “
10. மிளகு – மரீச்ச 10 “
11. திப்பிலி – பிப்பலீ 10 “
12. மோடி – பிப்பலீமூல 10 “
13. பெருங்குரும்பை – மூர்வா 10 “
14. சீந்தில் கொடி – குடூசீ 10 “
15. சிறுகாஞ்சூரி – துராலபா 10 “
16. கடுகரோஹிணீ – கடுகரோஹிணீ 10 “
17. பர்பாடகம் – பர்பாடக 10 “
18. கோரைக்கிழங்கு – முஸ்தா 10 “
19. நீர் பிரம்மி (காய்ந்தது) – நீர்ப்ரஹ்மி 10 “
20. குருவேர் – ஹ்ரீவேர 10 “
21. வேப்பம் பட்டை – நிம்பத்வக் 10 “
22. புஷ்கரமூலம் – கோஷ்ட 10 “
23. அதிமதுரம் – யஷ்டீமது 10 “
24. வெட்பாலைப்பட்டை – குடஜத்வக் 10 “
25. ஓமம் – அஜமோதா 10 “
26. வெட்பாலை அரிசி – இந்த்ரயவ 10 “
27. கண்டுபாரங்கி – பார்ங்கீ 10 “
28. முருங்கை விதை – சிக்ருபீஜ 10 “
29. படிகாரம் – ஸ்படிக 10 “
30. வசம்பு – வச்சா 10 “
31. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 10 “
32. பதிமுகம் – பத்மக 10 “
33. விளாமிச்சம் வேர் – உஸீர 10 “
34. சந்தனம் – சந்தன 10 “
35. அதிவிடயம் – அதிவிஷா 10 “
36. சித்தாமுட்டிவேர் – பலாமூல 10 “
37. மூவிலை – ப்ரிஸ்னீபார்ணீ 10 “
38. ஓரிலை – சாலிபர்ணீ 10 “
39. வாயுவிடங்கம் – விடங்க 10 “
40. கிரந்திதகரம் – தகர 10 “
41. கொடிவேலிவேர் – சித்ரக 10 “
42. தேவதாரு – தேவதாரு 10 “
43. செவ்வியம் – சவ்ய 10 “
44. பேய்ப்புடல் இலை – பட்டோல 10 “
45. ஜீவகம் – ஜீவக 10 “
46. ரிஷபகம் – ரிஷபக 10 “
47. இலவங்கம் – லவங்க 10 “
48. மூங்கிலுப்பு – வம்ஸலோசன 10 “
49. தாமரைக்கிழங்கு – பத்மமூல 10 “
50. காகோலீ – காகோலீ 10 “
51. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி 10 “
52. ஜாதிபத்திரி – ஜாதீபத்ரி 10 “
53. தாளீசபத்திரி – தாளீசபத்ர 10 “
54. நிலவேம்பு – பூநிம்ப 10 “








குறிப்பு:


ஜீவகம், ரிஷபகம் இவைகளின் மாற்றுச் சரக்காக பால் முதுக்கன் கிழங்கு மற்றும் சீந்தில் கொடி மொத்தம் இரண்டு பங்கும், காகோலியின் மாற்றுச் சரக்காக (பிரதிநிதி திரவ்யம் alias substitute drug) அமுக்கரா கிழங்கு ஒரு பங்கும் சேர்க்கவும்.


செய்முறை:


படிகாரத்தைத்
தவிர்த்து மற்ற சரக்குகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். படிக்காரத்தைப்
பொரித்துப் பொடித்து சலித்து சூர்ணத்துடன் ஒன்று சேர்த்து நன்கு கலக்கவும்.




அளவு:


1 முதல் 4 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.


தீரும் நோய்கள்:






தாதுக்களில் தங்கிய காய்ச்சல் எனப்படும் தாதுசுரம் (தாதுகாத ஜ்வர), குளிர் சுரம் போன்ற நச்சுக்காய்ச்சல்கள் (விஷமஜ்வர) மற்றும் பல வித காய்ச்சல்கள் (ஜ்வர), யானைக்கால் (ஸ்லீபாத), வயிற்றுப் பூச்சி (க்ருமி),தோல்நோய்கள் (சர்மரோக).


தெரிந்து கொள்ளவேண்டியது







இப்போது சுதர்சன சூர்ணம் -மாத்திரை வடிவிலும் கிடக்கிறது
பொதுவாக காய்ச்சலுக்கு முதல் வைத்தியம் -வயிற்றுக்கு பட்டினி போடுவது
நிலவேம்பு குடிநீரில் உள்ள மூலிகைகள் படம்


















சவால்
உடனடி காய்ச்சல் விட -லிங்க செந்தூரம் -ஒரு மிளகு எடை அளவுக்கு எடுத்து
-சுதர்சன சூர்ணம் ஐந்து கிராமில் கலந்து கொடுக்க -நீங்கள் காய்ச்சல்
வந்தவர்களுக்கு ஊசி போட்டால் எவ்வளவு வேகமாக குறையும் என்று நம்புகிறீர்களோ
-அந்த நேரத்தை விட சீக்கிரமாக காய்ச்சலை நீக்கும் என்பது எனது அனுபவம்

கண் குளிர்ச்சி பெற

வெங்காயம், புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும்.

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்



* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால...ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.



* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.



* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.



* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.



* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.



* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.



* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.



* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

நீரிழிவு

. மேகநாதத் தைலம்


புங்கம் பட்டை அழிஞ்சிப் பட்டை பிராயம் பட்டை எட்டிப் பட்டை மாம் பட்டை ஒதியம் பட்டை இலுப்பைப் பட்டை சங்கம் பட்டை புரசம் பட்டை சுரப் புன்னைப் பட்டை
நூற்றாண்டு வேம்பின் பட்டை
ஊழலாத்திப் பட்டை
முதிர்ந்த பூவரசன் பட்டை
நிலவிளாப்பட்டை சிவனார் வேம்புப் பட்டை


இவை வகைக்கு 10 பலம் நன்றாக இடித்து ஒரு பாண்டத்தில் சேர்த்து ஒரு குறுணி நீர் விட்டு அடுப்பில் இட்டு நன்றாகக் குழம்பாக வெந்த பின்பு அதில்


ஆடுதீண்டாப்பாளைச் சாறு கழற்கொடிச் சாறு சங்கன் குப்பிச் சாறு செருப்படைச் சாறு கொட்டைக் கரந்தைச் சாறு பொடுதலைச் சாறு


இவை வகைக்கு 1/4 படி எடுத்து மேற்படிச் சாற்றுடன் சேர்த்து அடுப்பில் வைத்துச் சுண்டிக் குழம்பு பாகம் அடையும் பொழுது நல்லெண்ணெய் 2 படி சேர்த்துப் பறங்கிப் பட்டை 2 பலம் பொடித்துப் போட்டு,


சுத்தித்த சேங்கொட்டை 1 பலம் இடித்துப் போட்டு,


மெல்ல எரித்து அடி பற்றாமல் மெழுகு பதத்தில் இறக்கி வைக்கவும்.


அளவு: முட்டைக் கரண்டி அளவு 2 வேளை கற்கத்துடன் கொடுக்கவும்.


தீரும் நோய்: கால், கை முடக்கு முதலான வாத நோய்கள் புற்று தோல் நோய்கள் அரையாப்பு நீராம்பல் பெருவயிறு பாண்டு மதுமேகம் போன்றவை குணமாகும்.


பத்தியம்: உப்பு மொச்சை பாசிப்பயறு துவரை முளைக் கீரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். 5 நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு மூழ்கலாம்.


நீரிழிவு நோய்க்கும் இம்மருந்தை வழங்கலாம். முட்டைக் கரண்டியளவு 2 வேளை கற்கத்துடன் வழங்க வேண்டும். பத்தியம் தேவை. 5- நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு முழுகலாம்.

-சித்த வைத்திய திரட்டு




2 . அப்பிரகப் பற்பம்

சுத்தி செய்த கிருஷ்ணா அப்பிரகம் 1 பலத்தை
ஒரு பாத்திரத்தில் இட்டு மருதோன்றி வேர் 16 பலத்தை இடித்து வேறொரு பாண்டத்தில் இட்டு, 64 பலம் தண்ணீர் விட்டு, அடுப்பேற்றிச் சிறுக எரித்து
4-இல் 1 பங்கான 16 பலமாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு,
நாளோன்றுக்கு 2 பலம் வீதம் அந்த அப்பிரகத்தில் 8 நாள் வார்த்து ஊற வைத்து நிழலில் உலர்த்தவும்.

அது நன்றாய் உலர்ந்த பிறகு, அந்த அப்பிரகத்தை நிறுத்து அப்போதிருக்கும் எடைக்கு 2 பங்கு கடப்பம் பிசின் சேர்த்து, அந்த 2 பங்கு பிசின் ஆறி ஒரு பங்காய் குறைந்த பிறகு, முன்போல நாள் ஒன்றுக்கு 2 பலம் வீதம் குப்பை மேனிச் சாற்றை 8 நாள் வரைக்கும் விட்டு ஊற வைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.

உலர்த்திய பின் அந்த அப்பிரகத்தை கல்வத்தில் இட்டு, அப்பிரக எடைக்கு 2 பங்கு வேப்பெண்ணெய் தினமும் விட்டு, அப்படி 6 நாள் அரைத்து வில்லை செய்து வெயிலில் உலர்த்தும் போது, வில்லையை நிறுத்துக் கொண்டு, அந்த எடைக்குச் சரி எடை ஏறும்படி 3 நாள் வரைக்கும் அத்திப்பாலை அந்த வில்லைக்கு அடித்து உலர்ந்த பின் அதை அகலில் இட்டு சீலை செய்து 60 வறட்டியில் புடமிட்டு நன்றாக ஆறின பின்னர் எடுத்தால், வெண்மையாய் இருக்கும்.

அளவும் அனுபானமும்: இப்பற்பத்தை 1 முதல் 2 குன்றியளவில் நெய்யிலாவது, வெற்றிலைச் சாற்றிலாவது அனுபானித்து 1 மண்டலம் வழங்கலாம்.தீரும் நோய்கள்: நீரிழிவு நோய் பிளவை மகோதரம் உன்மாதம் சுரம் விரைவாதம் முதலியன நீங்கும்.


பத்தியம்: புளி, புகையிலை, பெண்போகம், கடுகு, மதுபானம், அகத்திக்கீரை ஆகியவற்றை நீக்க வேண்டும்.

தீர்வு: சரியான முறையில் சுத்திகரித்துத் தயார் செய்த இப்பற்பம் எவ்விதத் தீங்கும் விளைவிக்காது. சுத்தியோ, செய்முறையோ சரியாக இல்லாவிடின் மருந்தீட்டால் உண்டாகும் கெடுதி போல துன்பம் விளைவிக்கும். அதுசமயம் மறுதோன்றி சுக்குக் குடிநீர் அருந்தினால் அத்துன்பம் நீங்கும்.

-சித்த வைத்திய திரட்டு




3 . பிரமேகத்திற்கு குடிநீர்


வேப்பம் பட்டை ஆமலகத்தோடு பேய்ப்புடல் சீந்தில்


இவைகளைச் சம அளவெடுத்துக் குடிநீர் செய்து தேன் விட்டு உட்கொள்ளப் பித்தப் பிரமேகம் தீரும்.

-ஆத்மரட்சாமிர்த வைத்திய சார சங்கிரகம்



4 . பிரமேக நோய்க்கு குடிநீர்


ஆவாரை வேர்ப்பட்டை வேம்பு மருது கருங்காலி வேங்கை கடலிராஞ்சி இவைகளின் பட்டை முருங்கை வித்து கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் முத்தக்காசு பொன் முசுட்டை தேற்றான் கொட்டை


இவைகளை உடனுக்குடனே குடிநீர் செய்து தேன் விட்டு உட்கொள்ள பிரமேகம் தீரும்.

-ஆத்மரட்சாமிர்த வைத்திய சார சங்கிரகம்



5 . வேப்பன் பிசின் சூரணம்


வெகு நாள் சென்ற வேப்ப மரத்தின் பிசினைக் காய வைத்து இடித்த தூள், வறுத்த சாமை அரிசி மாவு.


இவை இரண்டையும் சமமாகக் கலந்து வெருகடியளவு சூரணம் உட்கொள்ளலாம். காலை மாலை 2 வேளை 1 மண்டலம் உண்ணவும்.

தீரும் நோய்: நீரிழிவு குணமாகும்.

-மேக நிவாரணி போதினி

6 . மேகாதிக் குளிகை
உலர்த்தின இளந்தென்னம் பாளைப் பொடி மஞ்சள் கடுக்காய்த் தோல் நெல்லி முள்ளி தான்றிக்காய்த் தோல் - இவை வகைக்கு 8 பலம் பருத்திக் கொட்டைப் பருப்பு வெள்ளைக் குன்றிமணி பருப்பு புளியங்கொட்டைத் தோல் தேற்றான் கொட்டை சீவல் கற்கடக சிங்கி - வகைக்கு 2 பலம் நிலப்பனைக் கிழங்கு கறிமஞ்சள் மரமஞ்சள் கஸ்தூரி மஞ்சள் கொடிவேலி வேர்ப்பட்டை கருவேலம் பிசின் வெள்வேலம் பிசின் விளாம் பிசின் கருங்காலி பிசின் - வகைக்கு 6 1/4 வராகன் எடை வேப்பம் பிசின் 1/8 வராகன் எடை


இவை எல்லாவற்றையும் ஒன்றாக இடித்து வஸ்திரகாயம் செய்து கொள்ளவும்.சுத்தி செய்த நெல்லிக்காய் கந்தகம் 3 1/4 பலம் சுத்தி செய்த இரசம் 1 பலம் கிருஷ்ணா அப்பிரகச் செந்தூரம் 1 1/4 பலம்


இரசத்தையும் கந்தகத்தையும் சேர்த்து, கறுத்து மை போலாகிற வரையில் அரைத்துப் பின்னர் மேற்படி அப்பிரகச் செந்தூரத்தைச் சேர்த்து அரைத்து முன் சித்தப் படுத்தின சூரணத்தையும் சிறுகச் சிறுகப் போட்டுச் சேர்த்து அரைத்து நன்றாகக் கலந்த பின்ன எடுத்து அம்மியில் வைத்து,ஆவாரம் சாற்றால் 1 நாளும் மருத இலைச் சாற்றால் 1 நாளும் இலந்த இலைச் சாற்றால் 1 நாளும் அரைத்து, இலந்தைக் காயளவு உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.


அனுபானம்: வேளை 1க்கு ஒரு குளிகையாக தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.

தீரும் நோய்: தினம் காலை மாலை 2 வேளையாக உண்டு வர நீரிழிவு தீரும்.

-மேக நிவாரணி போதினி



7 . கடலழிஞ்சில் பட்டை இலேகியம்

1 வீசை கடலழிஞ்சில் பட்டையைப் பஞ்சு போல் இடித்து ஒரு பாண்டத்தில் இட்டு 8 படி நீர் விட்டு 1 படியாக வற்றக் காய்ச்சிப் பிசைந்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

1 படி பருத்திக் கொட்டையை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் உரலில் இடித்து, அப்பால் ஆட்டுக் கல் உரலில் போட்டு நீர் தெளித்துக் குளவியைக் கொண்டு ஆட்டி வழித்தெடுத்துச் சீலையில் வைத்துப் பிழிந்து பால் வாங்கவும். மீண்டும் திப்பியை உரலில் ஆட்டி முன் போல் பால் வாங்கவும். இப்படி 1 படி பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின் உலர்ந்த வன்னியிலை அத்திப் பிஞ்சு ஆவாரம் பட்டை கசகசா சுக்கு வேப்பம் பட்டை கிராம்பு ஓமம் கொத்துமல்லி சாதிக்காய் சிறுநாகப்பூ ஏலம் சடாமாஞ்சில் கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் மரமஞ்சள் வகைக்கு பலம் ஒன்றாக, இடித்து சூரணம் செய்து வைத்துக் கொள்ளவும்.


பின் கடலழிஞ்சில் பட்டை கியாழத்தையும் பருத்திக் கொட்டைப் பாலையும் ஒரு பாத்திரத்தில் இட்டு, 2 வீசை வெள்ளைச் சர்க்கரையைப் போட்டுக் கரைத்து அடுப்பில் ஏற்றிப் பாகுபதம் வரும் சமயம் முன் சூரணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறி கீழ் இறக்கிப் போதிய அளவு நெய், தேன் விட்டு கிளறி வைத்துக் கொள்ள வேண்டும்.

அளவு: இந்த இலேகியத்தை அந்தி சந்தி கழற்சிக்காய் அளவு கொடுத்து வரவும்.

தீரும் நோய்: மதுமேகம், நீரிழிவு நீங்கும்.

-சித்த வைத்திய பதார்த்த குண விளக்கம்

8 . கோமூத்திரச் சிலாசத்து

இது வெயில் காலத்தில் மலைகளின் இடுக்குகளிலிருந்து உருகி வெளியாகும் சத்து. இதை எடுக்கும் போது மண் கலந்திருக்கும். ஆதலால் 10 பலம் கோமூத்திரச் சிலாசத்தை வெந்நீரில் நன்றாகக் கலக்கி ஒரு வாயகன்ற பீங்கான் கோப்பையில் இட்டு வெயிலில் வைத்து அப்போதைக்கப்போது மேல் கட்டுகின்ற ஆடையை வழித்து ஒருங்கு சேர்த்துக் காயவைத்துப் பத்திரப்படுத்துக. இதுவே உயர்ந்த ரகமானதாகும்.

அதிலுள்ள மண்மாவும் அடியில் நின்றுவிடும். இதைப்போலவே வெந்நீருக்குப் பதிலாக திரிபலைக் கியாழம் அல்லது வேப்பம் பட்டைக் குடிநீர் இவற்றில் ஒன்றைக் கரைத்து வெயிலில் வைத்து மேல் கட்டுகின்ற அடையைச் சேகரிப்பது உண்டு.

அளவு: இதில் வேளைக்கு 1/2 முதல் 3 குன்றி சிறிது நெய்யுடன் சேர்த்து அனலில் காட்டி மத்தித்து தினம் 2 வேளை சாப்பிடலாம்.

ஆரம்பத்தில் 1/2 குன்றியளவு கொடுத்து நோய் குணமாகாவிடில் போகப் போக அளவினை அதிகப்படுத்தி 3 குன்றியளவு வரை கொடுக்கலாம்.தீரும் நோய்: மதுமேகம் கல்லடைப்பு ஈரல் நோய்கள் குன்மம் பெரும்பாடு முதலியன நீங்கும்.

அடிக்கடி தலைவலி




. சுரம், தலைவலிக்குக் குடிநீர்



ஆடாதோடை - 1 பங்கு
 வேப்பந்தோல் - 1 பங்கு
 சுக்கு - 1 பங்கு
 பற்பாடகம் - 1 பங்கு
 சந்தனம் - 1 பங்கு
 வெட்டி வேர் - 1 பங்கு
 முத்தக்காசு - 1 பங்கு
 விலாமிச்சு - 1 பங்கு
தண்ணீர் - 8 பங்கு
 இவற்றை 1/8 பங்கு குடிநீராகக் குறுக்கி இரவில் குடிக்க வேண்டும்.

 தீரும் நோய்கள் - வெதுப்பு, தலைவலி, சன்னி.


-

மருந்துகளின் மூலங்கள்


சித்த மருந்துகள் செய்வதற்கு மூலப் பொருள்களாக அமையும் மருந்துகளை வைத்து சித்த மருத்துவத்தின் சிறப்பினை அறியலாம்.
அவை வருமாறு,
1. உப்பு வகைகள் – 25
2. உலோகங்கள் – 12
3. உபரசங்கள் – 120
4.பாஷாணங்கள்-64
5.மூலிகைகள் - 1008
6.கடை மருந்துகள் - 64
ஆகும்.
இவை, பல்வேறு முறைகளில் மருந்தின் மூலப் பொருள்களாக அமைந்து நன்மருந்தாகி நோயைப் போக்கப் பயன்படுகின்றன.இவ்வாறு எந்த மருத்துவத்திலும் இல்லாத அளவு சித்த மருத்துவத்தில்1293 எண்ணிக்கைகள் கொண்ட மூலப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சித்த மருத்துவத்தில்
1. உப்பு, 2. பாடாணம், 3. உபரசம், 4. இரசம், 5. உலோகம், 6. கந்தகம் என ஆறு முறைகள் பின்பற்றப் படுகின்றன. மேலும் கட்டு, செந்தூரம், களங்கு, மெழுகு, தேன் போன்றவை ஆண்டுகள் பல ஆனாலும் வீரியம் கெடாமல் இருக்கும் மருந்துகளாகத் தயாரிக்கப் படுகின்றன. மற்ற மருத்துவ முறைகளில் இல்லாத வகையில் பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து தயாரிக்கப் படுவது சித்த மருத்துவ முறையில் மட்டுமே
பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து செய்யும் முறைகளாவன,

1. இரசம் செய்முறை
2. இரசக் செந்தூரம் செய்முறை
3. வீரம் செய்முறை
4. பூரம் செய்முறை
5. அரிதாரம் செய்முறை

இயற்கையில் கிடைக்கக் கூடிய பாஷாணங்கள் 32 ஆகும். அவற்றைக் கொண்டு, வைப்புமுறை என்னும் செய்முறைகளால் மேலும் 32 பாஷாணங்கள் சித்தர்களால் செய்யப்பட்ட செயற்கைப் பாஷாணங்கள்
மருந்துகளுக்கும் மருந்துகளைச் செய்வதற்கும் பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன என்பதால், சித்த மருத்துவம் எல்லா நிலைகளிலிருந்தும் ஆராயப் பெற்றவை எனக் கொள்ளலாம். விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகளும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

நல்ல பாம்பின் விஷத்தை எடுத்து, சூதம் ஒரு கழஞ்சு அந்த விஷத்துடன் கலந்து, வாலுகையில் ஒரு நாழிகை எரித்தால் சூதம் (ரசம்) கட்டும். அச் சூதக்கட்டு குருவாகும். அதனால் ஒன்பது வகையான உலோகங் களையும் உருக்கலாம் என்பர். இதனால், மருந்தாகப் பாம்பின் நஞ்சையும் பயன்படுத்தும் நிலையில் மருத்துவம் உயர்ந்திருப்பதை உணரலாம். அதேபோல, ஆனைத்தந்தம், குதிரைக் குளம்பு, ஒட்டகப் பிச்சு, கழுதை அமுரி, பன்றிக்குட்டி, நாய் மூளை, நரி மாமிசம், குரங்கு பிச்சு, ஓணான் பிச்சு, கெருடன் முட்டை, செம்போத்து, மயில் நெய், கிளியிறகு, நாணுவான் முட்டை, சக்கிர வாகம், அன்னம்–காக்கை முட்டை, கோழிமுட்டை, ஆந்தை–குயில் முட்டை, காட்டுப் புறா எச்சம், வீட்டுப் புறா எச்சம், தாரா முட்டை, ஊர்க்குருவி விந்து, அளுங்கு–உடும்பு நெய், முதலை நெய் , ஆமை, கல்லாமை, கட் டெறும்பு, பூனாகம், இந்திர கோபம், கரு நாகப் பாம்பு, நாகப்பாம்பு போன்றவை மருந்து செய் பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மமுனி அருளிய இஞ்சி லேகியம்




அவலேஹம் என்கிற சமஸ்க்ருதச் சொல்லே மருவி 'லேகியம்' என்றானது. தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பர். பொதுவில் லேகியம் என்பவை கெட்டியான குழம்பு போல இல்லாமல் சற்றே இறுகிய நீர்ம நிலையில் இருக்கும்.
இவ்வாறு நீர்ம நிலையில் தயார் செய்யப்படும் லேகிய வகைகளில் ஒன்றான "இஞ்சி லேகியம்" தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் பிரம்மமுனி அருளிய “பிரம்மமுனி வைத்திய சாரம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
சொல்லவே இஞ்சி லேகியத்தைக் கேளு
தோல்போக்கிப் பலம்பத்து நிறுத்துக் கொண்டு
பல்லவே பழச்சாற்றில் லாட்டி மைபோல்
மைந்தனே சட்டியிலே இட்டுக் கொள்ளே
அல்லவே சீரகமுமிள கோடே லமும்
அதிமதுரந் திப்பிலியும் கோஷ்டமூலம்
கல்லவே வாலுழுவை தாளிச்சப் பத்திரியுங்
கடுகொடு கொத்தமல்லி சித்திர மூலம்
பல்லவே சிங்கியொடு குரோசாணி ஓமம்
அப்பனே வகைவகைக்கு அரைப்பலம் தூக்கே
தூக்கியே கரிசாலை பூவரசம்பட்டை சாற்றால்
துவளையரைத்து முன்மருந்தோ டொக்கச் சேரு
ஊக்கமாம் பிரண்டையது மோரிலுப் பிட்டு
ஊறி உலர்த்திடித்து ஒருபலமே போடு
ஆக்கவே வங்காள சர்க்கரை யப்பா
அதில்பாதி போட்டபின்னே நெய்யை வாரே
நெய்வார்த்து லேகியமாய் பண்ணிக் கொண்டு
நேரமொரு பாக்களவு அந்திசந்தி கொள்ளு
பொய்யல்ல பித்தவாய்வு உஷ்ண காந்தி
பிரட்டல் சத்திவலி குன்மம் பித்தகுன்மம்
மெய்யான அஸ்திசுரம் சன்னி தோசம்
வீறான எரிகுன்மம் சீரண வாதஞ்
செய்யவே உப்பீசமும் அரோசிகமுந் தீரும்
தீவனமாம் பசியறிந்து சீராய்க் கொள்ளே
தோல் நீக்கிய இஞ்சி பத்துப்பலம் நிறுத்து எடுத்து, அதனைக் கல்வத்தில் இட்டு எலுமிச்சம் பழச் சாறுவிட்டு நன்கு மைபோல் அரைத்து அதனை ஒரு மண் சட்டியில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் சீரகம், மிளகு, ஏலம், அதிமதுரம், திப்பிலி, கோஷ்ட மூலம், வாலுழுவை, தாளிச்சப்பத்திரி, கடுகு, கொத்தமல்லி, சித்திரமூலம், கற்கடக சிங்கி, குரோசாணி, ஓமம் ஆகியவற்றை வகைக்கு அரைப் பலம் எடுத்துச் சேர்த்து கல்வத்தில் இட்டு கரிசாலை, பூவரசம் பட்டை ஆகியவற்றின் சாறுவிட்டு மெழுகு பதத்தில் அரைத்து எடுத்து இஞ்சி சேகரித்த மண் சட்டியில் இதனையும் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டுமாம்.
மோரில் உப்புப் போட்டு கலந்து அதில் பிரண்டையை சிறுதுண்டுகளாக அரிந்து ஊறப்போட்டு நன்கு காயவைத்து எடுத்து *சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். இந்த சூரணத்தில் ஒருபலம் எடுத்து முன்னர் மருந்துக் கலவை சேகரித்த மண்சட்டியில் இட்டு அதனுடன் சம அளவில் வங்காள சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் அளவாக நெய் சேர்த்து லேகியமாக தயார் செய்து எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.
இந்த லேகியத்தில் கொட்டைப்பாக்களவு எடுத்து காலை மாலை என இரு வேளையும் ஏழு நாட்கள் தொடர்ந்து உண்டுவர பித்த வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கி குணமாகுமாம். அத்துடன் பித்த வாய்வு, உஷ்ண காந்தி, புரட்டல், வாந்தி, வலிகுன்மம், சீரணவாதம் (செரியாமை), உப்பிசம், ருசியின்மை ஆகியவை குணமாகும் என்கிறார்.
மருந்துண்ணும் ஏழு நாளும் பத்தியமாக பசிக்கும் போது பசியின் தன்மை அறிந்து உண்ண வேண்டும் என்கிறார்.
*சூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காயந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது.

அனைத்து வித நோய்களும் தீர்ந்து உடல் காயகல்பமாகும்.



நவலோக காயகல்ப வல்லாதி

1. சேங்கோட்டை
2. புரங்கி சக்கை
3. நெல்லி வற்றல்
4. தான்றிக்காய்(விதைபோககி)
5. சுக்கு
6. சிற்றறத்தை
7. சடாமஞ்சல்
8. லவங்கப்பட்டை
இவையாவும் நெய்யிலும் பாலிலும் சத்து எடுத்து கொள்ளவும்.

1. கடுகுரோஷpனி
2. வெட்பாலையரிசி
3. நிலப்பனங்கிழங்கு
4. சிவனார் வேம்பு
5. ஜாதிக்காய்
6. கிராம்பு
7. ஜாதிபத்ரி
8. மிளகு
9. ஒமம்
10. திப்பிலி
11. செவியம்(மிளகு கொடிவேர்)
12. கார்போக அரிசி
13. கொத்தமல்லி
14. வாய்விளங்கம்
15. கருஞ்சிரகம்
16. சித்தர் மூலம்
17. குங்குமப்பூ
18. வாலுளுவை அரிசி
19. கோருராசனை
20. அஸ்வகெந்தி
21. ராய்வரி
22. ஆவின் நெய்
23. ஆவின் பால்
24. நுயம் தேன்
நவலோகம் வகைக்கு

தீரும் நோய்கள்:

மேகம் 21ம்
தோல் நோய்கள்
குஷ;டம் 18ம்
வாயு 26ம்
பிரமியங்கள்(தேம்ல், வெள்ளைவிழுதல்)
நயனவாதம்
வாதம், பித்தம்
மூலச்சூடு
மூலவாயு(காற்று போகுதல்)
சுகல விஷக்கடிகள்
அனைத்து வித நோய்களும் தீர்ந்து உடல் காயகல்பமாகும்.

படை, வண்டுக்கடி, தோல், நோய்கள் நீங்கும்.வெள்ளருகு சூரணம்




வெள்ளருகு 20 கிராம்
சங்கன் வேர்ப்பட்டை 20 கிராம்
சிவனார் வேம்பு 40 கிராம்
பறங்கிச்சக்கை 80 கிராம்

பறங்கிச்சக்கையை சிறு துண்டுகளாக்கி ஒரு பானையில் இட்டு பசும்பால் 1 லிட்டருடன் தண்ணீர் 1 லிட்டர் கலந்து எடுத்து 3ல்4 பாகம் சுண்டியபின் தண்ணீர் விட்டுக்கழுவி பறங்கிச் சக்கையை நன்கு வெயிலில் உலர்த்தவும். புpற சரக்குகளைத் தனிக்தனியே வெயிலில் உலர்த்தி, தனித்தனியே இடித்துச் சலித்து ஒன்று கலந்து வைத்துக் கொள்ளவும். குடைசியாக 160 கிராம் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளவும்.

அளவு, அனுபானம்:
காலை- இரவு உணவுக்குப் பின் 1 முதல் 2 கிராம், தண்ணீரில் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
படை, வண்டுக்கடி, தோல், நோய்கள் நீங்கும்

: 21 வகையான மேகநோய் ,சகலநோய்களும் நீங்கும். அப்ரேக் செந்தூரம்



கிருஷ;ண அப்ரேக்கட்டிகளை சுத்தித்து கால்பங்கு நெல்லுடன் கம்பளி மூட்டையைப் பிரிக்காமல், கைகளால் நன்கு பிசைந்து, ஊறிய அப்ரேக் அணுக்கள் துணி வழியே வெளியேறி, காடியிலே முற்றும் விழச் செய்து, சிலநாள் தெளியவைத்து அடியில் படியும் அப்ரேக் நவநீதத்தை வெளியிலில் உலர்த்தி எடுத்து 80 கிராம் வெங்காயம் 5 கிராம், வெள்ளைக் சாட்டாரணை வேரின்சாறு செல்லத்தக்க அளவு. ஆடாதோடை சாறு செல்லத்தக்களவு, ஆலம் விழுது கியாழம் செல்த்தக்களவு.

செய்முறை:
அப்ரேக் நவநீதத்துடன் வெங்காரத்தைச் சேர்த்துக் கல்வத்திலிட்டு, வெள்ளைச்சாட்டாணை வேர்ச்சாற்றினால் 3 மணிநேரம் அரைத்து, வில்லை தட்டி உலர்த்தி அகலிலிட்டு மேலகல் மூடி சீலைமண் செய்து 11ல்2 பங்கு சதுர அடிகுழியில் புடமிடவும். இப்படியாக 10 புடம் ஆடா தோடைச்சாற்றில் 10 புடம். ஆலம்விழுது கியாழத்தில் 10 புடம் ஆக அரைத்து, வில்லை தட்டி அகலிலிட்டு, கஜபுடமிட நல்லசெந்தூரமாகும்.

அளவு: 100 முதல் 200 மி.கிராம்: தினம் 2 வேளை, 1 மண்டலம்.
துணை மருந்து: பரங்கிப்படை சூரணம்: மார்க்கண்டேய சூரணம்: தேன்
தீரும்நோய்கள்: 21 வகையான மேகநோய்: மதுமேகம்: நீரழிவு: வெகுமூத்திரம்: மூத்திரக்கிரிச்சரம் முதலான சகலசிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களும் நீங்கும்.

தங்க செந்தூரம்




தங்கம் 10 கிராம்: கந்தகம் 50 கிராம்: சுத்திசெய்த பூநாகம் 30 கிராம்: வெங்காரம் 30 கிராம். கோவையிலைச் சாறு செல்லத்தக்களவு.

செய்முறை: தங்கம் தவிர மற்ற சரக்குகளைக் கல்வத்திலிட்டு செம்முள்ளிக்கீரைச்சாறு, கோவையிலைச்சாறு விட்டு 48 மணி நேரம் அரைத்துக்காயவைத்துப் பொடி செய்து, தங்கத்தை மூசையில் வைத்து உருக்கி கண்விட்டாடும்போதெல்லாம் ஒவ்வொரு சிட்டிகை அளவு. மேற்படி சித்தப்படுத்தின பொடியை கிராசம் கொடுத்து வருக. மூசை பழுதுபடும் சமயமாயின், தங்கத்தை ஆறவிட்டுடெடுத்து, மறுமூசையிலிட்டு, மீண்டும் உருக்கி கண்விட்டாடும்போது, சிறுசெருப்படைச்சாற்றினால் 12 மணிநேரம் அரைத்து, வில்லைசெய்து, காய்ந்த பின், லேகல் மூடி சீலைமண் செய்து உலர்ந்தபின் 25 எருவில் புடமிடவும் இப்படி, 3 புடமிட மிக உயர்ந்த செந்தூரமாகும்.

அளவு: 25 முதல் 50 மி.கிராம் தினம் 2 வேளை, 1 மண்டலம்.

துணைமருந்து: தேன், நெய், பாதாம் அல்வா. சுpட்டுக் குருவி லேகியம்.

தீரும் நோய்கள்: ஆண்மையின்மை, துரிதஸ்கலிதம், விந்து நீற்றுப் போதல் இவைகளை நீக்கி அதிகப்படியான போக சக்தியினை உண்டாகும் 7 முதல் 10 நாட்களில் நன்கு பலன் தெரியும். எனினும் 20 நாட்களுக்காவது குறையாமல் சாப்பிட வேண்டும். சப்த தாதுகளும் வலுப்பெற்ற உடல் வலுவடைந்து முகப்பொலிவும் தேஜஸீம் உண்டாகி மேனி பொன்னிறம் பெறும்.

பத்தியம்:
பூரண குணம் ஏற்படும் வரை புளி, புகை, புணர்ச்சியின்றி நல்ல சத்துள்ள உணவுகளை உண்டு வருதல் நல்லதாகும்.

செதில் உதிரும் நோய்:



இது தோலின் மேல் சிவப்பு நிறத்தில் வட்டமாகத் தோன்றும். அதன்மேல் சிரங்கு போன்ற கொப்புளங்கள் தோன்றி பின் தலை, கை, கால், வயிறு பக்கங்களில் வெண்மை நிறத்துடன், செதில் செதிலாகத் தோன்றி, விரிவடையும். யூகி தனது நூலில் இதன் தன்மையை விரிவாக எழுதியுள்ளார். விற்போடகக் குஷ;டம் என்ற தலைப்பில் 468வது பாடலில்(குஷ;டரோக நிதானம் என்ற தலைப்பில்) 'புதுமையாய் சரீர மெங்கும் தினவு உண்டாகும். குனத்த விற்போடக குஷ;டந்தானே' என்று கூறியுள்ளார். அவரின் 517வது பாடலில் இந்த நோய் சாத்தியம் என்கிறார். இந்த நோய் உடல் முழுமைக்கும் பரவி துன்பத்தை கொடுத்தாலும் சேவகனார் தைலம் அவர்களை நோயிலிருந்து விடுபடச் செய்கிறது.

சேவகனார் தைலம் செய்முறை:


தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்

தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்


வெண்புள்ளி நோய் அறிதல்:

உடம்பில் கை, கால், முகம், மறைமுக உறுப்புகளில் ஆரம்ப காலத்தில் வெண்புள்ளிகளாகத் தோன்றி பின்பு உடல் முழுவதும் நிறம் மாறி, மயிர் வெண்மை நிறத்தை அடையும். இந்த வகை நோயாளிக்கு குறைந்த கால அளவு மருந்து உட்கொண்டால் போதும். முதலில், ஆசன வாய், உள்ளங்கால், உதடு, விரல்களில் நுனி இவைகளில் தோன்றினால் அவர்கள் அதிக நாட்கள் மருந்து உட்கொள்ள வேண்டும்.
பிரிவு:1
• கார்த்திகைக் கிழங்கு 100 கிராம்
• காட்டுள்ளிக் கிழங்கு 100 கிராம்
• முதியார் கூந்தல் 100 கிராம்
• பிரப்பன் கிழங்கு 100 கிராம்
• பறங்கிப்பட்டை 100 கிராம்
• வெள்ளாட்டு சாணி 100 கிராம்

பிரிவு:2
• புங்கை எண்ணை 200 மி.லி
• வேப்ப எண்ணை 200 மி.லி
• இலுப்பை எண்ணை 200 மி.லி
• ஆடணக்கு எண்ணை 200 மி.லி
• நல்லெண்ணை 200 மி.லி

பிரிவு:3

• வெள்ளைப்பூண்டு சாறு 1லிட்டர்
• பெருங்காயம் 50 கிராம்
• சுக்கு 50 கிராம்
• மிளகு 50 கிராம்
• திப்பிலி 50 கிராம்
• கற்கண்டு 50 கிராம்
செய்முறை:
பிரிவு 1ல் குறிப்பிட்ட மூலங்களை நன்றாக இடித்து பட்டையை நன்றாக சிதைத்து, நூறு லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு, ஒரு மரத்து விறகால் எரித்து ஒரு லிட்டர் வரும் வரை நன்றாக எரிக்கவும். அந்த கசாயத்தை நன்றாக வடிகட்டிக் கொண்டு, ஒரு பெரிய வாணலில் ஊற்றி, அதில் பிரிவு 3ல் உள்ள வெள்ளைப்பூண்டு சாறுடன் மற்ற பொருட்களைக் கூட்டி (சரக்குகள் அனைத்தையும் இடித்து சலித்த பின்), 2ம் பிரிவில் உள்ள எண்ணெய்ப் பொருட்கள் கலவையில் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி, நீர் சுண்டி வரும் பக்குவத்தில் கற்கண்டைப் பொடி செய்து போட்டு, மெழுகு பதம் வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்.
மருந்தின் அளவு:
பெரியவர்களுக்கு 1 டீஸ்பூன்(5 கிராம்)
சிறியவர்களுக்கு 1ல்2 பாகம் டீஸ்பூன்(3 கிராம்)
மருந்துண்ணும் நெறி:
மருந்து உண்ணும் போது இறைச்சி, உலர்ந்த மீன், மொச்சை, கொள்ளு, புளி, புளிப்புச் சுவையுள்ள பழங்கள், பூசணி, கடுகு, எண்ணை, புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் தவிர்க்க வேண்டும். உடலுறவு கூடாது.
குணப்படுத்த முடிவதும் முடியாததும்:
சேதில் உதிரும் நோய் உடல் முழுவதும் வியாபித்து கனத்து கரடு கட்டி இருப்பினும் குணமடையும். வெண்படை நோய் உடல் முழுமையும் பரவி, வெண்மையாகி, முழங்கால், கைகளில் கரடு ஏற்பட்டு புண்களாகி நீர்வடியும் பட்சத்தில் தீர்க்க முடியாது.

தாது பலவீனம் குணமாவது காமகேசரி மாத்திரை



காமகேசரி மாத்திரை


சரக்கு:
• மதனகாமப்பூ அரை பலம்
• ஜாதிக்காய் அரை பலம்
• முருங்கைவித்து அரை பலம்
• அரசம்வித்து அரை பலம்
• அதிமதூரம் அரை பலம்
• கிராம்பு அரை பலம்
• மராட்டிமொக்கு அரை பலம்
• ஆலம்வித்து அரை பலம்
• அத்திவித்து அரை பலம்
• அபினி அரை பலம்
• பதங்கம் கால் பலம்
• சாம்பிராணி கால் பலம்
• தங்க செந்தூரம் கால் பலம்
• விராகனிடை சால் பலம்
செய்முறை:
இங்கு கூறப்பட்டது 12 சரக்குகளில் இடித்து சூரணம் செய்ய வேண்டியவற்றை சூரணித்து இடித்து சரக்குகளுடன் தட்டிக் கல்வத்திலிட்டு முருங்கைப்பூச்சாறு விட்டு 4 சாமம் அரைத்து கடலை பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் சீசாவில் பத்திரப்படுத்து.
பிரயோகம்:
இம்மாத்திரையை வேளைக்கு ஒன்றாக காலை மாலை காய்ச்சிய பசுவின் பாலில் தூள் செய்து போட்டுக்கலக்கி 40 நாள் உண்டு வருக.
தீரும்வியாதி:
தாது பலவீனம் குணமாவதுடன் தேக சக்திவுண்டாகும் கிரமமாக ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்.

போகம் வெகு நேரமிருக்கும்.தாது புஷ;டி மாத்திரை




தாது புஷ;டி மாத்திரை

சரக்கு:
வாலைரசம் 3 விராகனிடை சுத்திசெய்த லிங்கம் 2 விராகனிடை
செய்முறை:
இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு அரைத்து பிறகு சுத்தி செய்த எண்ணெய் வெங்காரம் 1 சுத்தி செய்த கஞ்சா அபின் இவைகள் வகைக்கு பலம் அரை சேர்த்து அரைத்து அத்துடன் கிராம்பு முருங்கை வித்து சாதிக்காய் சாதிபத்திரி கோரைக்கிழங்கு பூனைக்காலி விதை சாரப்பருப்பு பூமிசர்க்கரைக்கிழங்கு வகைக்கு அரைபலம் சூரணித்து வஸ்திரகாயஞ் செய்து சேர்த்து ஒரு முற்றின் தேங்காய்க்குள் அடைத்து சாணியால் கவசம் செய்து 10-15ல் எருவில் புடம் போட்டு எடுத்து தேங்காய் உடைத்து முருங்கைப்பூ சாற்றால் 3 சாமம் அரைத்து கழற்ச்சி காய் அளவு மாத்திரைகளாக்கி உலர்த்திவைத்துக் கொண்டு 1, 2 மாத்திரைகள் சூரணித்து சீனியுடன் சேர்த்துப்போட்டு காய்ச்சி உடனே சாப்பிடவும். இவ்விதமாக காலை மாலை இருநேரம் 20 நாட்கள்(அரை மண்டலம்) சாப்பிட்டால் விந்து ஸ்தம்பனமாகி இடுப்புவிடமாட்டாது போகம் வெகு நேரமிருக்கும்.

தாதுபுஷ;டி சுவர்ண மாத்திரை



சரக்கு:
தங்கபுஷ;பம், மதனபூ, அபின், கிராம்பு, சாதிக்காய், மாராட்டிமொக்கு, சாம்பிராணி, பரங்கம், முருங்கை வித்து, ஆலம்வித்து, அரசம்வித்து, அத்திவித்து, அதிமதூரம் இவையாவும் வகைக்கு 5 விராகனிடை.
செய்முறை:
இவைகள் 12ம் வகைக்கு 5 விராகனிடை சேர்த்து முருங்கைப்பூ சாற்றால் அரைத்து 5 கிரேன் எடை உள்ள மாத்திரைகளாக செய்து கொள்ளவும் அதாவது பெரிய குண்டுமணி அளவு மாத்திரைகளாக செய்யவும் தினம் காலை மாலை ஒவ்வொரு மாத்திரைகளாக சாப்பிட்டு உடனே பசும் பாலில்; முருங்கைப்பூ போட்டுக் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் விந்து ஊறி தம்பன சக்தியுண்டாகி தினம் 100 ஸ்திரீகள் நடுங்குவார்கள். இந்த மாத்திரையை சாப்பிட்டால் சிலருக்கு கரிகரிப்பு மயக்கம் உண்டாகும். ஆதலால் அவர்கள் குறைந்த அளவில் சாப்பிட வேண்டியது இம்மருந்து அனுபவத்தில் மிகச்சிறந்ததாக அறியப்பட்ட முறையாகும்.

(சூதகத்தை சரிசெய்து கற்பம் உண்டாகும்)மூசாம்பர மெழுகு




மூசாம்பர மெழுகு
(சூதகத்தை சரிசெய்து கற்பம் உண்டாகும்)

சரக்கு:
கரியபோளம் 1 விராகனிடை, பாவேந்திர போளம், 1-விராகனிடை, மிளகு கால் பலம், கறிமஞசள் கால் பலம், கருஞ்சீரகம் 1 பலம், கடுகு 1 பலம், பனைவெல்லம் 4 பலம்.
செய்பாகம்:
பனைவெல்லம் நீங்கலாக மற்றசரக்குகளை ஒரு சட்டியிலிட்டு இளஞ்சூட்டில் வெதுப்பி ஆறவிட்டு இடித்து கல்வத்திலிட்டு அதனுடன் பனைவெல்லம் கூட்டி அரைக்கவும். மெழுகுபதம் இல்லாது இருப்பின் தேனை துளித்துளியாக விட்டு 2 மணி நேரமரைத்து வழித்து சீசாவில் பத்திரப்படுத்தவும் வேளைக்கு 2 கடலை அளவு காலை மாலை 5 நாள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
ஸ்திரீகளுக்கு மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் வயிற்றுவலி அழுக்குசரியாக வெளிகாணாமல் இருப்பது குணமாகும். இந்தபிரயோகம் 5 மாதம் வரையில் வீட்டு விலக்கத்தில் கொடுக்கவும். சந்தான சித்தியுண்டாகும்.

மூலநோய் தீர்க்கும் மூலிகை மருத்துவம்



அறிமுகம்:
விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அச்சம் தரும் அளவு உலகில் பெருகிக் கொண்டிருக்கிறது. அதுபோல் நோயும் மனிதர்களுக்கு புதிது புதிதாகத் தோன்றி அச்சுறுத்துகிறது. வேகமான வாழ்க்கையில் மனிதன் மனிதத்தை இழந்து வருகிறான். நவீன உலகில், நவீன உணவில் மனிதனின் மனம் மட்டும் இறுகிப் போய்விடவில்லை, அவனின் மலமும் இறுதிப் போய்விட்டது. சித்தர்கள் நம்மை கடைப்பிடிக்கச் சொன்ன நாளுக்கு இரண்டு, வாரமிரண்டு, மாமிரண்டு, வருடமிரண்டு என்ற வழக்கம் மாறிப் போனதால் வந்த துன்பம் இது.
(பொதுவாக மனிதர்களுக்கு வரக்கூடிய (வரக்கூடாத) சிக்கல் இரண்டு அவை 1 மனச்சிக்கல், 2 மலச்சிக்கல். இதன் காரணமாக ஏற்படும் நோய்களில் முக்கியமானது மூலம் எனும் நோய், இது இரண்டு வகைப்படும்.)
1. ஆசன வாயின் மேல் பகுதியில் உள்ள மூலநோய்
2. ஆசன வாயின் கீழ் (அல்லது) வெளிப்பகுதியில் உள்ள மூலநோய்
ஆசன வாயின் கீழ்ப்பகுதியில் உள்ள மூல நோய்கள் மிகவும் பிரச்சினைக்குரியது. இம்மூலநோய் கடிக்காரத்தின் மூன்று மணி, ஏழு மணி, பதினோரு மணி என்று குறிக்கும் இடங்களில் ஆசன வாயின் அருகில் வரும்.
மூலநோய் அறிகுறிகள்:
ஆசனவாயில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வலியோடு கூடிய வீக்கம் இடுப்புப் பகுதியில் வலி, இரத்தம் கசிதல், மூலமுனை வறண்டோ, வழவழத்தோ, பெரிதாகவோ காணும் அஜீரணம், மலச்சிக்கல், வாயு, இருதய வலி.
மூலநோய் காரணங்கள்:
ஓன்றுக்கொன்று முரணான உணவு உண்ணுதல், நார்ச்சத்து குறைந்த உணவுகளை உண்ணல், அஜீரணம், தாய் தந்தை வழிப்பரம்பரை, குடிப்பழக்கம், அதிக உடலுழைப்பு, உடலுழைப்பு அறவே இல்லாதது, வெயில், தீ போன்றதில் அதிக நேரம் வேலை செய்வது.
இவைகளை சேர்த்து சிவப்பு பருத்திப்பூ சாற்றாலும் கற்றாழைச்சாற்றாலும் வகைக்கு ஒரு சாமம் அரைத்து உலர்த்தி சீலைமண்செய்து சென்ற காசிக்குப்பியில் போட்டு பலபக்கல்லால் மூடி சீலை மண் செய்து ஒரு சட்டியில் 5 விராகனிடை மணலைப்போட்டு அதன் மேல் மேற்படி குப்பியை வைத்து பின் குப்பியின் கழுத்து வரையிலும் மணலைக்கொட்டி சட்டியில் மூடி சீலைமண் செய்து தீபாக்கினியால் மூன்று நாள் எரித்து ஆறவிட்டு குப்பியை உடைத்து மருந்தை யெடுத்து அத்துடன் சாதிக்காய் பச்சைகற்பூரம் கிராம்பு சமுத்திரசோகை விதை வகைக்குவிரானிடை 1 கஸ்தூரி 4 குன்றிமணி எடை இவைகளை யெல்லாம் சேர்த்து வெற்றிலைச் சாற்றினால் அரைத்து குண்டு மணி அளவாய் உருட்டி மாத்திரைகளாக்கி தினம் காலை மாலை தாம்பூலத்துடன் 1 முதல் 2 மாத்திரை வரை சாப்பிட்டால் தாது புஷ;டி உண்டாகி அனேக ஸ்திரீகளை போகிக்க சக்தி உண்டாகும்.

நவமூலத்துக்கு மாத்திரை

சரக்கு:
சுக்கு கெந்தகம் இந்துப்பு ரசம் வெஙகாரம் இவையாவும் வகைக்கு 2 பலம் சுத்திசெய்த வாளம் 5 பலம்.
செய்முறை:
இவைகளை குமரிச்சாற்றில் (சோத்து கற்றாழை) அரைத்து குன்றி அளவாய் மாத்திரைகள் செய்து உலர்த்தவும் இந்த மாத்திரை 1 அல்லது 2 தேகத்திற்கு தக்கபடி வாழைப்பழம் தேன் நெய் இவைகளினால் அனுபானித்துக் கொடுக்க மூல மூளை வேரோடு கரைத்து விடும் 3 நாளைக்கு ஒரு தடவையாக 3 நாளைக்கு கொடுக்க மூல மூளை கரைந்து குணமாகும்.

சிறுநீரகக் கல்லடைப்பும் மூலிகை மருத்துவமும்



அதிகமான உடல்சூடு, உணவு, நீர் போன்றவற்றின் மாறுபாடு, இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து, உடல் நீர் வற்றி, சிறுநீரின் உப்புக்களையும் உறையச் செய்வதால் சிறுநீரகத்தில் கல்லடைப்பு ஏற்படுகிறது.
சிறுநீரகக் கல் சிறியதாக இருக்கும்போதே அதற்குரிய மருத்துவ சிகிச்சை செய்துக் கொள்வது சிறந்தாகும். முhறாகஈ பெரிதாக இந்த நோய் வளர்ந்து. கல்லின் அளவு பெரியதாகிவிட்டால் மூத்திரைப்பையின் அடிப்புறம் தாங்க முடியாத ஏற்படும். சிறுநீர் விட்டுவிட்டு வரும். சில நேரங்களில் கலங்கிய பழுப்பு நிறத்துடன், தாங்க முடியாத வலியுடன் சிறுநீர் வெளியேறும். வயிற்றில் ஏற்படும் இந்த வலி வயிறு முழுவதும் பரவி பிறகு இடுப்புப் பகுதியிலும் வலியை உருவாக்கி விடும்.
முற்றிய நிலையில் சிறுநீரகக் கல்லானது நீர்த்தாரையின் சுவர்களை சேதப்படுத்திவிடும். இந்த நிலையில் சிறுநீருடன் இரத்தமும் சேர்ந்து, அடர சிவப்பு நிறமாக வெளிவரும்.
மருத்துவம்:
சிறுநீரகக் கற்களைக் கரைத்து. வெளியேற்ற உடல் சூட்டைக் குறைக்கும் மருந்துகளையும் உணவு முறைகளையும் தொடர்ந்து உண்டு வரவேண்டும். மூலிகை மருத்துவத்தில் சிறுநெருஞ்சில், சிறுபீனை, நீர்முள்ளி, வாழைத்தண்டு போன்றவை சிறுநீரகக் கற்களை கரைப்பதிலும், சிறுநீரை நன்கு வெளியேற்றுவதிலும் உறுதுணை புரிகின்றன. இவற்றில் சிறுநெருஞ்சில், சிறுபீளை மற்றும் நீர்முள்ளி ஆகியவை சமூகக் குடிநீராக தினமும் எடுத்துக்கொள்ள உகந்தவை. குஷhயம் அல்லது நிழலில் உலர்த்தப்பட்ட சமூலத்தின் தூளாகவும்(வெந்நீருடன்) கொள்ளலாம். வுhழைத்தண்டு உணவில் தினமும் சேர்க்கலாம். வுhழைத்தண்டு சாறு 50 மி.லி அளவுக்கு மேற்படாமல் தினமும் குடித்துவர ஆரம்பநிலை சிறுநீரகக் கற்கள் குணமாகும் என்பது திண்ணம்.

விந்து கட்டும் விந்து ஊறும் பலம்தரும். தாதுபுஷ;டி லேகியம்





தாதுபுஷ;டி லேகியம்
சரக்கு:
திரிகடுகு 2 பலம், கசகசா 2 பலம், சாதிக்காய் 2 பலம், சாதிபத்திரி 2 பலம், நிலப்பானை கிழங்கு 2 பலம், வால்மிளகு 1 பலம், நீர்முள்ளிவிதை 10 விதை 10 பலம், பூனைக்காலி விதை 1 பலம், வெள்ளரிவிதை 1 பலம், வாய்விளங்கம் 1 பலம், கிராம்பு 1 பலம், தாமரைக்கிழங்கு 1 பலம் கருப்பு திராட்சை, வத்தல் 10 பலம், பாதம்பருப்பு 10 பலம், ஜப்ஜாவிதை 2 பலம், பேரிச்சங்காய் 2 பலம், ஸ்கல்விதை 2 பலம், பூமி சர்க்கரை கிழங்கு 2 பலம், அஸ்வகெந்தி 2 பலம், முந்திரிபருப்பு 1 பலம், அதிமதுரம் 1 பலம், அத்திவிதை, அரசம்விதை, ஆலம்விதை, தாமரைவிதை, முருங்கவிதை, ஆவாரம்பிசின், சோம்பு, லவங்கப்பத்திரி, சாரப்பருப்பு, லவங்கப்பட்டை, காமச்சர்க்கரை, கருவேலன் பிசின், முருங்கைப்பிசின,; கன்ன லவங்கப்பட்டை இவை வகைக்கு 1 பலம் அஸ்கா ஒன்னரை வீசை தேன் படி 1
செய்பாகம்:
இதனை லேகிய முறைப்படி செய்யவும். இது நல்ல லேகியம் மூளை இருதயம் நரம்பு முதலிய ராஜ கருவிகளுக்கும் புஷ;டிதரும் விந்து கட்டும் விந்து ஊறும் பலம்தரும்.





சிறுநீருடன் விந்து வெளியேறுதல் ஸ்வப்னஸ்கலிதம்

மேகமுட்கர் வடி
உபயோகம்:
20 வகையான மேக நோய்கள், சிறுநீருடன் விந்து வெளியேறுதல் ஸ்வப்னஸ்கலிதம், நீர் எரிச்சல், சிறுநீர்ப்பை அழற்சி, சிறுநீர் வெளிப்படும் போது வலித்தல் ஆகிய குறிகுணங்கள் நீங்கும்.
அளவு:
1 மாத்திரை காலையும் மாலையும் பாலுடன் அல்லது மருத்துவர் பரிந்துரைப்படி எடுக்கவும்.


சூதகவலி,




ரஜப்பிரவர்த்தனி வடி
உபயோகம்:
சூதகவலி, சூதகம் ஏற்படும் முன் உண்டாகும் மனஉளைச்சல், இடுப்பு வலி, அடிவயிற்றில் வலி மற்றும் கால் தொடைகளில் வலி ஏற்படுதல், உள்ளங்கை, கால்களில் ஏற்படும் ஏரிச்சல் மற்றும் சூரகத்தடை இவைகளுக்கு நல்ல பலனனிக்கும்.

ஆண்குறித் தளர்ச்சி நீங்க:


ஓரிதல் தாமரை இலைகள் பச்சையாகப் பறித்து, பத்து இலைகள் வீதம் தினமும் சூரிய உதயத்திற்கு முன் கொடுக்கலாம். இதை 3 மாதங்கள் கொடுக்க குறித் தளர்ச்சி நீங்கும். (அல்லது)
ஓரிதல் தாமரை இலைத்தூள் காலை மற்றும் மாலை வேளைகளில் அரை தேக்கரண்டி அளவு மற்றும் கற்கண்டு 10 கிராமுடன் பசும்பால் கலந்து கொடுக்கவும்.
குறிப்பு:
மேற்கூறிய மருந்தை ஆண், பெண் வெள்ளைப்படுதலை நீக்கவும் கொடுக்கலாம்.

மலட்டுத்தன்மை கர்ப்பக் கோளாறுகள் நீங்கி கரு தங்கும்








வெள்ளருகு சூரணம்(வேறு)

வெள்ளருகு 100 கிராம்
மிளகு 10 கிராம்
வெள்ளருகை நிழலில் உலர்த்தி இடித்து, சூரணித்துக் கொள்ளவும். முpளகை நன்கு பொடித்துச் சலித்து இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
அளவு, அனுபானம்:
மாவிடாய் ஆன நாள் முதல் 3 நாட்கள் காலையில் மட்டும் ஒரு வேளை 1 கிராம் அளவு மருந்தை பசும்பாலுடன் சாப்பிட்டு வரவும். தொடர்ந்து 3-4 மாதங்கள் (மாரவிடாய்க் காலத்தில் மட்டும்) சாப்பிடவும்.
தீரும் நோய் : கர்ப்பக் கோளாறுகள் நீங்கி கரு தங்கும்.

விளக்கம்:
திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்குள் குழந்தை பெற முடியாத நிலை மலட்டுத்தன்மை எனப்படுகிறது.
பெண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்:
• கருக்குழாய், கற்பப்பை, யோனி ஆகிய இடங்களில் வாயு அடைப்பு
• கற்பப்பை வலுவின்மை
• கற்பப்பை சுருங்குதல்
• யோனி, கருக்குழாய், கற்பப்பை ஆகிய இடங்களில் சதை வளர்ச்சி
• போதை வஸ்துக்கள் எடுத்துக் கொள்ளுதல்.
• சீரற்ற மாதவிடாய்
• கர்ப்பத்தை தள்ளிப்போட உபயோகிக்கும் மருந்குகள்.
• கற்பப்பையில் உள்ள புழுக்கள் (இவை மலட்டுத்தன்மையைக் குணப்படுத்தத் தரப்படும் மருந்தின் குணத்தை சில சமயங்களில் முறியடித்துவிடும்).
குறிப்பு:
மலட்டுத் தன்மையில் பிரதானமாக இருக்கக்கூடிய தோஷ;ங்களை நோயானியின் வார்த்தையிலிருந்தும் நாடியிலிருந்தும் தெரிந்துக் கொள்ளலாம். பொதுவான பெண் மலட்டை
• ஆதி மலடு
• கரு மலடு
• காக்க மலடு
• கரலி மலடு
என்ற நான்கு பிரிவாகப் பிரிக்கலாம்.
ஆண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்:
• விந்தணுக்கள் குறைவு
• ஆண்குறித் தளர்ச்சி
• விதைப்பையில் அடிபடுதல்
• பரபரப்பான நவீன வாழ்க்கை முறை
• மன நிம்மதி இல்லாமை
• நாள்பட்ட தைராய்டு பிரச்சினை
• சிறுவயதில் புட்டாலம்மை நோயால் பாதிக்கப்படுதல்
• முதுகுத் தண்டில் அடிபடுதல்

விந்துஊறும் தாதுகட்டும், நரம்புகள் வலுப்படும் அயச்செந்தூரம்



நன்கு சுத்திசெய்த அயத்தூள் 250 கிராம், மான்செவிக்கள்ளிப் பால் 200 மி.லி உதியம் பட்டைச்சாறு செல்லத்தக்களவு.
செய்முறை:
அயத்தூளை மான்செவிக்கள்ளிப்பாலில் போட்டு வெயிலில் வைக்க நீறும். நன்கு காய்ந்தபின் சுரண்டி கல்வத்தில் போட்டு, உதியம் பட்டை சாற்றினால் 12 மணிநேரம் அரைத்து 11-2 அடி சதுர குழியில் புடமிடவும். இப்படி 10 புடமிட மிகமென்மையான சிவந்த செந்தூரமாகும்.
அளவு:
100 முதல் 200 மி.லி கிராம், தினமிருவேளை, தேனில், 1 மண்டலம்.
தீரும் நோய்கள்:
பாண்டு, சோகை, காமாலை, இரத்த குறைவு நீங்கும், உடல் இறுகும், விந்துஊறும் தாதுகட்டும், நரம்புகள் வலுப்படும்.

, பக்கவாதம் பஞ்ச சூத செந்தூரம்



வீரம், பூரம், லிங்கம், ரசம், ரசசெந்தூரம். வகைக்கு 35 கிராம், நெருஞ்சிச்சாறு செல்லத்தக்க அளவு. தாய்ப்பால் அல்லது வெள்ளாட்டின் பால் செல்லத்தக்க அளவு.
செய்முறை:
மேலே கூறப்பட்ட பாஷhணங்களை முறைப்படி சுத்தி செய்து, கல்வத்தில் இட்டு ஒன்றன்பின் ஒன்றாக போட்டு அரைத்து, நெருஞ்சில்சாறு விட்டு 12 மணிநேரம் சுருக்குக் கொடுத்து, எடுத்து, குழியம்மியில் இட்டு கொடிவேலிவேர் குடிநீரால் ஒரு வாரம் நன்கு அரைத்து உலர்த்தி பதனப்படுத்துக.
அளவு:
50 முதல் 100 மில்லிகிராம் வரை, காலை மாலை இருவேளை
துணை மருந்து:
தேன், நெய், மார்க்கண்டேய சூரணம்.
நோய்கள்:
கை, கால்கள் பிடிப்பு, பக்கவாதம், குத்தல், குடைச்சல், உடலில் ஒடி ஒடி குத்துகின்ற வாய்வு, நாக்குவாதம் முதலியன குணமாகும்.
பத்தியம்:
புளி, புகை, புணர்ச்சி நிக்கி, பாலன்னம் உட்கொள்ளவும்.
குறிப்பு:
மருந்து 5 நாட்கள், 5 நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடியும் மருந்து தரவேண்டும். நோய்க்கேற்ற துணை மருந்துகளில், அவரவர் அனுவத்திற்கேற்றபடி கொடுக்கலாம்.

விந்து நீற்றுப்போதல், ஆண்மையின்மை மன்மதலோக செந்தூரம்



சுத்திசெய்த அயத்தூள் 150 கிராம் சுத்திசெய்த செம்மண் பூராகம் வகைக்கு 150 கிராம்.
செய்முறை:
இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு 6 மணிநேரம் அரைத்து எடுத்து வில்லை செய்து, ஒட்டிலிட்டு மேலோடு மூடி சீலைமண் செய்து, 2 அடி சதுரபுடமிடவும். மறுபடியும் பூநாகம் சேர்த்து முன்போல் அரைத்து புடம். இவ்வாறு 16 தடவை புடமிட்டு 17ம் தடைவ பூநாகம் சேர்க்காமல் புளிப்பு மாதுளம்பழச்சாறு விட்டு 3 மணிநேரம் அரைத்து சிறு சிறு வில்லைகளாக செய்துலர்த்தி, முன்போல் புடமிட்டு எடுக்கவும்.
அளவு:
25 முதல் 50 மில்லிகிராம் வரை காலை மாலை இருவேளை ஒரு மண்டலம். புளி, புகை, புணர்ச்சி தள்ளி.
துணைமருந்து:
நெய், தேன், பாதாம் அல்வா, சிட்டுக்குருவிலேகியம்.
தீரும் நோய்கள்:
விந்து நீற்றுப்போதல், ஆண்மையின்மை இவைகளை நீக்கி உடலில் நல்ல இரத்தம் விருத்தியாகி நரம்புகள் முறுக்கேறி தேகம் வன்மை பெறும். ஆண்மை சக்தியை விருத்தி செய்து வாலிய சக்தியை உண்டாக்கும். இதை வருடத்தில் 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் வஜ்ஜிர உடம்காகும்.

இரத்த உற்பத்தி உண்டாகும். சுயமக்கினி செந்தூரம்



சுத்தி செய்த:
இரசம் 40 கிராம், மனோசிலை 20 கிராம், கந்தகம் 80 கிராம், காந்தம் 160 கிராம், அயத்தூள் 320 கிராம், குமரிச்சாறு செல்லத்தக்களவு.
செய்முறை:
கந்தகத்தையும் இரசத்தையும் கல்வத்திலிட்டு நன்கு கறுப்பாகும் வரை அரைத்து பிறகு மற்ற சரக்குகளை ஒன்றன்பின் ஒன்றாக அரைத்துச் சேர்த்து, குமரிச்சாறுவிட்டு 6 மணி நேரம் நன்கு அரைத்து உலர்த்திப் பொடித்து வெண்கலத்தட்டில் பரப்பி கடும் வெயிலில் வைக்க பூத்துவிடும். ஆறியவின் கல்வத்திலிட்டு அரைத்துப் பயன்படுத்தவும்.
அளவு:
100 முதல் 200 மி.கிராம் வரை, தினம் 2 வேளை 1 மண்டலம்.
துணைமருந்து:
நெய், தேன், சீரகசூரணம், சீந்தில் சூரணம்.
தீரும் நோய்கள்:
வாத குன்மம், மகோதரம், மூலம், கிராணி, பேதி, காமாலை, பாண்டு, சோகை, இரத்தக் குறைவு நோய்கள் நீங்கி இரத்த உற்பத்தி உண்டாகும்

இரத்த தாதுக்கள் பெருக்கமடையும்.



அக்கினி குமார செந்தூரம்
இரசம், மனோசிலை, வகைக்கு 40 கிராம், காந்தம் 160 கிராம், அயப்பொடி 320 கிராம், இலிங்கம், கல்நார், கல்மதம் வகைக்கு 10 கிராம், சோற்றுக் கற்றாழைச் சாறு செல்லத்தக்களவு.
செய்முறை:
இரசத்தையும் கந்தகத்தையும் கல்வத்திலிட்டு முறைப்படி, அரைத்துபின், மற்ற சரக்குகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து, சோற்றுக்கற்றாழைச் சாறு விட்டு 3 மணி நேரம் அரைத்து உலர்த்திப் பொடித்து இரும்புக் கிண்ணத்திலிட்டு கடும் வெயிலில் வைக்க புகைத்து செந்தூரமாகும். அதைக் குப்பியில் அடைத்து நெற்புடமாக மண்டலம் வைத்து எடுத்து பயன்படுத்தவும்.
அளவு:
100 முதல் 200 மி.லி கிராம் தினம் 2 வேளை
துணைமருந்தும்: தீரும் நோய்கள்:
இஞ்சிச்சாற்றில் 10 நாட்களுக்குக் கொடுக்க வாதம், சுரம், எண்வகை குன்மம், சன்னிநோய்களும், வெள்ளுள்ளி, தைலத்தில் கொடுக்க சன்னி, கபநோய்களும், தேனில் கொடுக்க மகோதரம், உளமாந்தை, நீர்கோவை, கிராணி, மந்தாக்கினி, நீரழிவு நோய்களும், கரப்பான் சாற்றில் கொடுக்க காமாலை, சோகை, பாண்டு நோய்களும் நீங்கி உடலில் இரத்த தாதுக்கள் பெருக்கமடையும்.

வாதநோய், பிரமேகம், நீரடைப்பு, சூதகவாயு, கபநோய்கள்.





மால்தேவி செந்தூரம்
அப்பளக்காரம் 150 கிராம், படிக்காரம் 150 கிராம், சுத்தி செய்த மால் தேவி என்ற தாளகம் 315 கிராம்.
செய்முறை:
முன் இரண்டு சரக்குகளையும் தூள் செய்து, ஒரு சட்டியிலிட்டு, அடுப்பின் மீது வைத்தெரிக்க உருகும். அச்சமயம் மேற்படிச் சேர்த்து நன்கு புரட்டிக் கொண்டிருக்க உருகிய உப்பு ஒரு பாகம் தாளத்தைப் பிடித்துக் கொள்வதுடன், தாளகமும் சிவந்து விடும். இதைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து பதனப்படுத்தவும். துனித்திருக்கும் உப்பை நீக்கிவிடவும்.
அளவு:
50 முதல் 100 மி கிராம், தேனுடன்
தீரும் நோய்கள்:
வாதநோய், பிரமேகம், நீரடைப்பு, சூதகவாயு, கபநோய்கள்.

நரம்புத்தளர்ச்சி, , இருதயபலவீனம், வாதம்




அயவீர செந்தூரம்
சுத்தி செய்த அயத்தூள் 50 கிராம், வீரம் 25 கிராம்
செய்முறை:
இரு சரக்குகளையும் கல்வத்திலிட்டு நாவல் பட்டைச் சாறு, பொற்றிலைக்கரிப்பான் சாறு, மொந்தன் வாழைச்சாறு இவைகளை முறையே 200 மி.லி வீதம் ஒன்றன்பின் ஒன்றாகவிட்டு நன்கு அரைத்து வில்லை தட்டி காய்ந்த பின் அகலில் அடக்கி மேல் அகல் மூடி சீலை மண் செய்து உலர்ந்தபின் 11ல் 2 பாகம் முழ உயரத்திற்கு எருவடுக்கி குழிபுடமிட உயர்தர செந்தூரமாகும். இதைக்க கல்வத்திலிட்டு நன்கு அரைத்துப் பதனபடுத்தவும்.
அளவு:
100 முதல் 200 மி.லி கிராம் தினம் 2 வேளை 1 மண்டலம்.
துணைமருந்து:
தேன், இலேகியம், நெய், அமுக்குரா சூரணம்.
தீரும் நோய்கள்:
நரம்புத்தளர்ச்சி, தமரக நோய்கள், இருதயபலவீனம், வாதம், முதலியவைகளை நீக்கி உடலுக்கு வன்மைகளைத் தரும்.
பத்தியம்:
இச்சாமத்தியம் அவசியம் மேற்கொள்ள வேண்டும

மூட்டுவலிமருத்துவம்:




மருத்துவம்:
மூட்டுவலி மருத்துவத்தில் உள்மருந்தை தேர்வு செய்வது என்பது நோயாளியின் நாடி நடை, தேக வன்மை மற்றும் சரியான நோய்க்கனிப்பு போன்ற விஷயங்களை முறையாக கடைப்பிடித்தால் மட்டுமே முழுமையான தீர்வைக் கொடுக்க இயலும். ஆகவே வெளிப்பிரயோக மருந்துகளை மட்டுமே இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும். ஏனெனில் எனது அனுபவத்தில் நோயாளர்கள் வெளிப்பிரயோக மருந்தில்கூட முழுமையாக குணமடைந்ததும் உண்டு.
சரக்குகளும் செய்முறையும்:
கொடிவேலி, ஆதண்டை, மாவிலிங்கம், பொற்கொன்றை, வேம்பு, காற்றொட்டி, புங்கம் வேர்ப்பட்டை இவை வகைக்கு 3 பலம்(105 கிராம்) இடித்து, தூணிப்பதக்கு(ஆறுமரக்கால்) தண்ணீர் விட்டு, ஜந்தில் இரண்டாகக் காய்ச்சி, வடிக்கட்டிக்கொண்டு, ஆமணக்கு எண்ணெய், வேப்ப செய்தது), அதிமதுரம், பெருங்குரும்பை, குளவிந்த மஞசள், திரிபலா, சாதிக்காய், வசம்பு, அரத்தை, துருக, ஓமம், வெள்ளைப் பூண்டு, சேராங்கொடடை, (சுத்தி செய்தது), பெருங்காயம், கார்போக அரிசி, வளிச்சப்பிசின், திப்பிலி, சுக்கு.
இவை வகைக்கு ஒன்றரை பாகம் வராகனெடைத் (6.3 கிராம்) தூள் வீதம் போட்டு எரித்து, வடித்து, மூட்டுவலியுள்ள பகுதியில் நேய்த்து வர, எட்டு நாளில் வாதம் என்று சொல்லக்கூடிய எல்லா வியாதிகளும் தீரும். இது கைகண்டமுறை, அகஸ்தியராலும் சொல்லப்பட்டிருக்கிறது.
தெரிந்து கொள்வோம்:
1. தொண்டை வலியை உடன் குணப்படுத்தாவிடில் மூட்டுவாதம் வர வாய்ப்புண்டு.
2. மூட்டுவாத நோய் கண்டவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும்.
3. கீல்வாத நோய் கண்டவர்கள் வலி இருந்தாலும் மூட்டுகளை அசைக்க வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் மூட்டுகள் செயலிழக்க வாய்ப்புண்டு.
4. எலும்பு சிதைவு மூட்டு அழற்சி நோய் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

பந்துக் கிண்ண மூட்டுகள்:
ஒர் எலும்பின் பந்து போன்ற உருண்டை முனை மற்றொன்றின் குழியில் பொருந்தி இருப்பது
(எ-டு): தோள், இடுப்பு, மூட்டுகள். இந்த இரு இடங்களில் உள்ள மூட்டுகளுக்கு பின்வரும் அசைவுகள் உள்ளன.
வளைதல், அசைதல், உடலின் மையத்திலிருந்து புறம்பே போய் அசைதல், உடலின் மையத்தை நோக்கி வருதல், திரும்புதல் அல்லது வட்டமிடுதல், வட்டமாகச் சுழலுதல்.
கீழ் மூட்டு:
இதனால் ஏற்படும் அசைவுகள் வளைத்தலும், நீளுதலும் மட்டுமே (எ-டு) மழங்கை, முழங்கால், விரல் மூட்டுகள்.
வழுக்கு மூட்டுகள்:
ஒன்றன் மேல் ஒன்றுள்ள எலும்புகள் வழுக்கி வருதல், ஒரளவு தாரளமாக அசைவுகள் ஏற்படும். எ-டு: மணிக்கட்டு, கணுக்கால் மூட்டுகள்.
முளை மூட்டு:
வட்டமிடுதல்(திரும்புதல்) என்பவை மட்டும் தான் இந்த மூட்டுகளில் (எ-டு) தலை திரும்பும் போது, அட்லஸ் எலும்பு, பிடர் அச்சின்மேல் சுழலுகிறது, கையைத் திரும்பம்போது, ஆர எலும்பு, முழங்கை எலும்பின்மேல் சுழலுகிறது.
மூட்டுவலியின் பிரிவுகளும், அறிகுறிகளும்:
மூட்டு வாதம், கீழ் வாதம், அடிபடுதலால் ஏற்படும் மூட்டழற்சி, மூட்டில் தொற்று, மூட்டு எலும்புச் சிதைவு அழற்சி.
மூட்டு வாதம்:
அறிகுறிகள்: பெரிய மூட்டுகளில் வீக்கம், வலியுடன் கூடிய காய்ச்சல்.
வெளிப்பாடுகள்: மூட்டுகளில் வீக்கம் மாறி மாறி வரும். மூட்டுவலி கடுமையாக இருக்கும். மூட்டில் நீர்; கோர்த்து இருக்கும். மூச்சுத் திணறல் இருப்பதாக முறையிடக் கூடும். சமீபத்தில் தொண்டைவலி கண்டிருக்கலாம்.
கீழ் வாதம்:
அறிகுறிகள்: கைகள், பாதங்களில் உள்ள சிறு மூட்டுகளில் வலி, வீக்கம்.
வெளிப்பாடுகள்: காய்ச்சல் அதிகம் இருக்காது. காலையில் வலி கடுமையாக இருக்கும். சிறு மூட்டுகள் அதிக அளவிலும் பெரிய மூட்டுகள் சிறிய அளவிலும் பாதிப்படையும்.
அடிபடுவதால் ஏற்படும் மூட்டழற்சி:
அறிகுறிகள்: கீழே விழுவதால் ஏற்படும் மூட்டுவலி, வீக்கம்.
வெளிப்பாடுகள்: எலும்பு முறிவு, மற்ற காயங்கள் இருக்கலாம்.
மூட்டில் தொற்று:
அறிகுறிகள்: காய்ச்சல், மூட்டுகளில் வீக்கம், மூட்டுகளில் வலி பாதிக்கப்பட்ட உறுப்பை அசைக்க மறுத்தல், அசைத்தால் வலி அதிகமாக இருக்கும்.